Tamilnadu
ஏரியில் மீன்பிடித்த நண்பர்களுக்கு நேர்ந்த துயரம்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்!
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த மோட்டூர் அஞ்சலக தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவரது மகன் பிரதீஷ் (12). அதேபோல் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவரது மகன் அன்பரசு (15).
நண்பர்களான பிரதீஷ் மற்றும் அன்பரசு இருவரும் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் மீன் பிடிப்பதற்காகச் சென்றனர். அப்போது இருவரும் ஏரியில் கரையோரம் அமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கால் இடறி இருவரும் ஏரியில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளனர். இதை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் கிராம மக்கள் உடனே ஏரியில் குதித்து இருவரையும் மீட்டு அருகே இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு சிறுவர்களும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஆளுநரின் இந்த துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்” : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“குதிரை பேரத்தில் No 1 குற்றவாளி விஜய் தான்” : கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றச்சாட்டு!
-
தவெக ஆட்சியில் ‘அரசு வழக்கறிஞர்’ பதவிக்கு ரூ.30 லட்சம் வரை லஞ்சம்! : திமுக தகவல் தொழில்நுட்ப அணி கண்டனம்!
-
“த.வெ.க வாஷிங் மெஷினில் புனிதர்களாகும் ஊழல் வாதிகள்” : முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!