Tamilnadu
"மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு ஆட்சி நடத்தும் பா.ஜ.க": CPI டி.ராஜா கடும் தாக்கு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாநில மாநாடு திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள சந்திராபுரம் பகுதியில் நடைபெற்றது. இதனை அடுத்து மாநாட்டின் இறுதி நிகழ்வாகப் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா கலந்து கொண்டு பேசுகையில், ஒரே நாடு , ஒரே கலாச்சாரம் , ஒரே மொழி , ஒரே வரி என ஒற்றை நாடாக மாற்ற பா.ஜ.க முயல்கிறது. பா.ஜ.க ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்துவதாகவும் , நாடு ஒன்றுபடவேண்டுமானால் பா.ஜ.க-வின் கருத்து எதிர்க்கப்படவேண்டும்.
மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேன்டும்.இது வரலாற்றுத் தேவை. பா.ஜ.க-வை முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகள் , இடதுசாரிகள் ஒன்றுபட வேன்டும்.
பா.ஜ.க மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்துகிறது. ஜனநாயகம். நாட்டை காப்பாற்ற பாஜக அகற்றப்படவேண்டும் . அதற்கு ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு முன்வர வேண்டும். அதிகார பலம் பணம் பலம் வைத்து பா.ஜ.க தமிழகத்தில் காலுண்ற நினைக்கிறது. இதனை மக்களுக்காக உள்ள கட்சிகள் , ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!