Tamilnadu
“செயற்கைகோள்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.. சிக்னல் போக இதுதான் காரணம்” - விஞ்ஞானிகள் விளக்கம் !
இந்திய விண்வெணி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்தது. எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுகிறது.
இதற்கான கவுனட்டவுன் இன்று காலை 2.26 மணிக்கு துவங்கிய நிலையில் இன்று காலையில் சுமார் 9.18 மணிக்கு ராக்கெட் ஏவப்படுகிறது. இந்த எஸ்.எஸ்.எல்.வி- டி1 ராக்கெட்டில் இ.ஓ.எஸ் 02, ஆசாதிசாட் என்கிற இரண்டு எடை குறைந்த செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது.
எடை குறைந்த சிறிய செயற்கைக்கோள்களை சுமந்துசெல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது 120 டன் எடை கொண்ட இந்த ராக்கெட் 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை சுமந்து செல்வது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இரண்டு செயற்கைக்கோள்களின் சிக்னல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. மேலும் செயற்கைக்கோள்களில் இருந்து சிக்னல்களைப் பெற தீவிரமாக முயற்சித்து வருகிறோம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.
மீட்க தேவையான நடவடிக்கையை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். 18 நிமிடங்களில் சிக்னல் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்காததால் 2 செயற்கைக்கோள்களையும் பயன்படுத்த முடியாமல் போனது.
இந்நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 2 செயற்கைக் கோள்களையும் பயன்படுத்த முடியாது என இஸ்ரோ அறிவித்துள்ளது. நீல்வட்டப்பாதையை அடைந்த செயற்கைக் கோள்களை மீண்டும் மீட்க முடியாது. எனவே 2 செயற்கைக் கோள்களையும் இனி பயன்படுத்த முடியாது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார்.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !