Tamilnadu
பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அடுத்தடுத்து உயிரிழக்கும் காட்டு யானைகள்.. கர்ப்பமான யானை உட்பட 3 யானைகள் பலி!
கம்பீரத் தோற்றத்துடன் கூட்டமாக வாழக்கூடிய யானைகள் காடுகளின் பாதுகாவலன் என போற்றப்படுகிறது. நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் தனது வலசுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி நடந்து சென்று ஒரு பகுதியில் இருக்கும் விதையை மற்ற பகுதிக்கு பரப்புவதில் மிகப்பெரிய பங்கு யானைகளுக்கு உள்ளது.
இந்நிலையில், யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசு, பூச்சிக்கொல்லிகள், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துகள், விவசாய பயிர்களை காக்க விவசாயிகள் கையாளும் தவறான உத்திகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், கர்நாடகாவில் மின் வெளியில் சிக்கி கடந்த 5 நாட்களில் 3 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா மஞ்சள்ளி பகுதியில் இரைத்தேடி வனப்பகுதியில் இருந்து கிராமப்பகுதிக்கு வந்த 25 வயது பெண் யானை ஒன்று, காபி தோட்டத்திற்குள் புகுந்தது.
அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த காட்டு யானையின் மீது மின்சாரம் தாக்கியதில் யானை சம்பவம் இடத்திலேயே இறந்தது. இது குறித்து அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து இறந்த யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர்.
இதில் யானை கர்ப்பமாக இருந்ததும், இரை தேடி வந்த போது உயிரிழந்ததும் தெரியவந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் விராஜ்பேட்டை தாலுகா நெல்லுதிகேரியில் அறுந்துவிழுந்த மின்கம்பியை மிதித்த 2 காட்டு யானைகள் உயிரிழந்த சோகம் நடந்திருந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு கர்ப்பிணி யானை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
-
“எதிர்க்கட்சித் தலைவர் கைது.. பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பயந்த பாசிச தவெக அரசு” : துரைமுருகன் கண்டனம்!
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது... நீதிமன்ற உத்தரவை மீறி அராஜகத்தில் ஈடுபடும் தவெக அரசு!
-
“நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்புவேன்..” - கர்ஜித்த உதயநிதி.. போலீசை ஏவிய தவெக அரசு!