Tamilnadu
குழந்தையின் தொண்டையில் சிக்கிய பேட்டரி.. அறுவை சிகிச்சையின்றி அகற்றம் - தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை!
திருவண்ணாமலை மாவட்டம் மேல்கப்பலுாரைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவரின் 2 வயது ஆண் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது வட்ட வடிவிலான பட்டன் பேட்டரி ஒன்றை விழுந்து உள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் குழந்தையை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக எக்ஸ்-ரே எடுத்துள்ளனர்.
எக்ஸ்-ரே பரிசோதனை முடிவில் பேட்டரி குழந்தையின் உணவு குழாய் மற்றும் மூச்சுக்குழாய் இடையே, தொண்டையில் சிக்கியிருந்தது தெரியவந்துள்ளது. உடனே அதை ஆப்பரேஷன் இன்றி அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து, 'லாரிங்கோ ஸ்கோபி' முறையில், அறுவை சிகிச்சையின்றி பேட்டரியை அகற்றியுள்ளனர். இந்த சிகிச்சைக்கு பின்னர் குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!