Tamilnadu
கோவையில் கஞ்சா சாக்லேட் விற்ற வட மாநில வியாபாரி.. சுற்றிவளைத்து கைது செய்த போலிஸ்!
கோவை மாவட்டத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு போதை சாக்லேட் விற்கப்படுவதாக போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை அடுத்துக் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலிஸார் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது போதை சாக்லேட் விற்ற சேத்தன் என்ற ராஜஸ்தான் மாநில வியாபாரியை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த 40 கிலோ போதை சாக்லேட்களை போலிஸார் பறிமுதல் செய்தனர். மேலும் சாக்லேட்டில் கஞ்சா கலந்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேபோல் இவருக்கு வேறு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது போன்று வேறு இடங்களில் கஞ்சா சாக்லேட் விற்கப்படுகிறதா என்பது குறித்தும் மாவட்டம் முழுவதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Also Read
-
கச்சத்தீவு விவகாரம் : “இலங்கை அதிபரின் பேச்சு, இருநாட்டு உறவுக்கு எதிரானது” - CPI முத்தரசன் கண்டனம்!
-
முதலமைச்சரின் ஜெர்மனி பயணம் மூலம் ரூ.7020 கோடி முதலீடு... 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி !
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !