Tamilnadu
மசாஜ் சென்டரில் இளம்பெண்களை மிரட்டி பணம் மற்றும் நகை கொள்ளை.. 4 பேர் கைது : விசாரணையில் பகீர் தகவல்!
புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள சங்கரதாஸ் வீதியில் மசாஜ் சென்டர் ஒன்று இயங்கி வருகிறது. இதனிடையே கடந்த 6 ஆம் தேதியன்று மர்ம கும்பல் ஒன்று மசாஜ் சென்டருக்குள் புகுந்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, அங்கு இருந்த பெண்ணின் கழுத்தி அணிந்து இருந்த ரூ.81 ஆயிரம் மதிபுள்ள அரை சவரன் தங்க நகை மற்றும் பணத்தை பறித்து சென்றனர்.
இது குறித்து மசாஜ் சென்டரின் உரிமையாளர் விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பெரியகடை போலிசார் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது பல்வேறு குற்ற சம்பவங்கள் மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய ரெயின்போ நகரை சார்ந்த பிரபல ரவுடி சத்யா தலைமையிலான 7 பேர் கொண்ட கும்பல் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து தனிப்படை அமைத்து போலிசார் அந்த கும்பலை தேடி வந்த நிலையில், 4 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சத்யா உள்ளிட்ட 3 பேரை சிசிடிவி காட்சியை வெளியிட்ட தொடர்ந்து தேடி வருகின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!