Tamilnadu

புற்றுநோயால் உயிரிழந்த மனைவி.. 2 ஆண்டுகள் கழித்து மகளுடன் கணவன் எடுத்த விபரீத முடிவு!

வேலூர் மாவட்டம், டி.கே. புரம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி சிவக்குமாரி. இந்த தம்பதிக்கு பவித்ரா, பிருந்தா என இரண்டு மகள்கள் இருந்தனர். இதையடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிவக்குமாரி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதனால் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் தினரகன் கடும் மன அழுத்தத்திலிருந்து வந்துள்ளார்.

இதையடுத்து ஆறு மாதங்களுக்கு முன்பு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றியுள்ளனர். இருப்பினும் தற்கொலை முடிவிலிருந்து அவர் மீண்டு வரவில்லை. இந்நிலையில் நேற்று இரண்டு மகள்களுடன் சேர்ந்து தினகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதில் புடவை அறுந்து பவித்ரா கிழேவிழுந்துள்ளார். பின்னர் தந்தை மற்றும் சகோதரி சடலமாக இருந்ததைப் பார்த்து அலறியுள்ளார்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் இருவரது உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி உயிரிழந்ததால் கணவர் மகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அக்கா திட்டியதால் ஆத்திரம்.. குடிபோதையில் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீதம் - சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்!