Tamilnadu
சிறுமிகளின் ஆபாச படங்களை ஷேர் செய்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கதி.. சென்னை போலிஸார் அதிரடி நடவடிக்கை!
18 வயதிற்குட்பட்ட சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளங்கள் வாயிலாக பார்ப்பவர்கள் மற்றும் ஷேர் செய்பவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளில் போலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சிறுமி ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்ததாக தமிழ்நாட்டில் பல இளைஞர்களை போலிஸார் கைது செய்தனர்.
மேலும் ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் பட்டியலை பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான தேசிய மையம் தயார் செய்து இந்தியா முழுவதிலும் அந்தந்த காவல் மாவட்டத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி சூளை பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவரான சந்தோஷ்குமார் (17), தனது செல்போனில் தடை செய்யப்பட்ட சிறுமிகளின் ஆபாச படத்தை பார்த்து தனது நண்பர் ஒருவருக்கு ஷேர் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான தேசிய மையம் வேப்பேரி அனைத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளது.
Also Read: மனைவிக்கு புடவை கட்டத் தெரியாததால் மன உளைச்சல்.. திருமணமான 6 மாதத்தில் கணவன் செய்த செயலால் பரபரப்பு!
அதன் பேரில் வேப்பேரி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவரான சந்தோஷ்குமார் (18) என்பவரை அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த 2019ஆம் ஆண்டு சந்தோஷ் குமாரின் படிப்பிற்காக அவரது தந்தையான சென்னை உயர் நீதிமன்ற கிளர்க் சுப்பிரமணியன் செல்போனை வாங்கி கொடுத்துள்ளது தெரியவந்தது. அந்த செல்போனை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட சிறுமிகளின் ஆபாச படங்களை பார்த்து வந்ததும், அந்த ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அவரது நண்பர் குகனுக்கு இன்ஸ்டாகிராமில் அனுப்பியதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தலைமறைவாக உள்ள சந்தோஷ்குமாரை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!