Tamilnadu
ஒருதலையாக காதலித்து சிறுமியிடம் அத்துமீறல்: தட்டிக்கேட்ட தந்தை மீது நாட்டுவெடி வீச்சு; வாலிபர் வெறி செயல்
பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் கிராமத்தைச்சேர்ந்த தனபால் (24). இவர் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
அதே கிராமத்தில் 9ஆம் வகுப்பு படிக்கும் அதே ஊரைச் சேர்ந்த சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்த தனபால் அவரை கேலி கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இது சம்பந்தமாக மகேஷின் தந்தை ஏழுமலை தனபாலின் பெரியப்பா செல்வத்திடம் கூறி ஒரு வாரம் முன்பு தனபாலை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த புதனன்று (ஏப்.,20) இரவு மகேஷின் வீட்டின் அருகே தொடர்ந்து நடந்து போவதும் வருவதுமாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த ஏழுமலை தனபாலை குச்சியால் அடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து ஏழுமலை மற்றும் அவரது அண்ணன் திருமலை ஆகியோர் தனபால் வீட்டிற்கு சென்று தட்டிக் கேட்டிருக்கிறார்கள். ஆத்திரமடைந்த தனபால் அப்போது வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடியை மேலே தூக்கி வீச முயற்சித்திருக்கிறார்.
அதனை பார்த்த தனபாலின் சகோதரர் நந்தக்குமார் என்பவர் தடுத்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடம் சென்று தனபாலை கைது செய்ததோடு அவரிடமிருந்த 23 நாட்டு வெடிகளையும் கைப்பற்றினர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிந்த பெரம்பலூர் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
6வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! ஒரே தொடரில் சாதனை மேல் சாதனை! - முழுவிவரம் உள்ளே