Tamilnadu
மெரினாவின் அழகுக்கே அழகு சேர்க்கும் திமுக அரசு.. செயல்பாட்டில் முதல்வரின் கனவு திட்டமான Project Blue !
சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த 'Project Blue' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடற்கரையில் உள்ள கழிவறை, நடைமேடை, பூங்காக்களை சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் பார்வையிட்டார்.
மேலும் மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகள் கடலருகே சென்று ரசிக்கும் விதமாக கடற்கரை மணல்வெளியில் அமைக்கப்படவுள்ள நிரந்தரப் பாதை குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை மேயர் மகேஷ்குமார், "வெளிநாட்டு கடற்கரைகளைப் போல மெரினா கடற்கரையையும் அழகுபடுத்த , முதல்வரின் கனவுத் திட்டமான 'Project Blue' திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி மெரினாவில் உள்ள கழிவறை , குடிநீர் இணைப்புகள் , பூங்கா , மாற்றுத்திறனாளிகளுக்கு அமைக்கப்படவுள்ள நிரந்தரப் பாதை குறித்து இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
மெரினா நீச்சல் குளத்தை மேம்படுத்தும் பணியில் மாநகராட்சி ஈடுபட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினா கடற்கரையில் நிரந்தரமாக மரப்பாதை அமைக்க 1 கோடி ரூபாய்க்கு மேல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் கழிவு நீரை வெளியேற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இணைப்புகளை கண்டறிந்து அவற்றை துண்டிப்போம்.
இதுபோன்று செய்யும் தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஓரிரு முறை எச்சரிப்போம் , பின்னர் மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும். சென்னையில் மாடுகளை வளர்ப்போர் குறிப்பிட்ட எல்லைக்குள்ளே அவற்றை பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் மாநகராட்சி மூலம் இட வசதி ஏற்படுத்தித் தரப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.
Also Read
-
அம்மோனியா வாயுக் கசிவு: “எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது” - உதயநிதி வலியுறுத்தல்!
-
“ஏ.. எடு.. எடு..” -சேலம் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் மாமூல்.. அட்ராசிட்டியில் ஈடுபடும் தவெக நிர்வாகி!
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!