Tamilnadu

திருமணமான 2 மாதத்தில் காதலனுடன் சென்ற மகள்.. சோகத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு!

திருச்சி மாவட்டம், அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு வைஷ்ணவி என்ற பெண்ணுடன் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென வைஷ்ணவி மாயமாகியுள்ளார்.

இதையடுத்து அவரது கணவர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது, வைஷ்ணவி கார்த்தி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி மாரியப்பனுக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இதனால் அவர் தனது காதலனுடன் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து மகள் மாயமானதால் அவரது தந்தை சண்முகம் விஷம் குடித்துள்ளார். இது பற்றி அறிந்த அவரது உறவினர்கள் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Also Read: ஆண் நண்பர்களுடன் பேசியதைக் கண்டித்த தாய்.. 17 வயது மகள் செய்த கொடூரச் செயல் : உறவினர்கள் அதிர்ச்சி!