Tamilnadu
மனைவியின் ஆண் நண்பர் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவன் : விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி பிரியா. இவருக்கும் தமிழரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த அவரது கணவர் மனைவியைக் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து தமிழரசனுடன் பழகிவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு பிரியா தமிழரசன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அறிந்த கணவர் சசிகுமார் ஆத்திரமடைந்துள்ளார். பின்னர் அவரது வீட்டிற்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த தமிழரசன் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !
-
பிரசாரத்தின்போது மோடி முகத்தை மறைத்த வேட்பாளர்... மோடி கொடுத்த Ultimate Reaction - பின்னணி என்ன?
-
அவர் நட்சத்திர வீரர், இவர் இளம் வீரர் என்பதால் புறக்கணித்துள்ளனர் - தேர்வு குழுவை விமர்சித்த சேவாக் !
-
பலம் வாய்ந்த இரு அணிகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியாவின் Trade : கடைசி இரு இடங்களில் MI,GT !