Tamilnadu
மாணவிகளிடம் ஈவ் டீஸிங்; பள்ளியில் புகுந்து அட்டூழியம் - நீலாங்கரை போலிஸிடம் சிக்கிய போதை சகோதரர்கள்!
சென்னை பாலவாக்கம் பகுதியில் உள்ள ஆதி திராவிடர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் நேற்று (மார்ச் 16) மாலை 4.30 மணியளவில் வகுப்பு முடிந்து வெளியே வரும் போது, அங்கு குடி போதையில் நின்று கொண்டிருந்த 2 பேர் ஒரு மாணவியை கிண்டல் செய்ததோடு அவதூறாகவும் பேசியிருக்கிறார்கள்.
உடனே அந்த மாணவி தலைமை ஆசிரியரிடம் கூறியிருக்கிறார். இதனையடுத்து சக ஆசிரியர்களுடன் தலைமை ஆசிரியை சின்னிராஜகுமாரி மாணவிகளிடம் தகராறில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டிருக்கிறார்கள். அப்போது அவர்களையும் அந்த நபர்கள் அவதூறாக பேசி ஆசிரியர்களை தாக்கவும் முயற்சித்திருக்கிறார்கள்.
மேலும் போதையில் பள்ளி வகுப்பறையில் நுழைந்து அங்குள்ள நாற்காலிகளை கீழே தள்ளி சேதப்படுத்தி அட்டூழியம் செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக தலைமை ஆசிரியை சின்னி ராஜகுமார் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலிஸார், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் தகராறில் ஈடுபட்ட பாலவாக்கம் பகுதியை சகோதரர்களான முகமது இப்ராஹிம் (26), அப்துல் ரஹிம் (28) ஆகிய இருவரை கைது செய்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!