Tamilnadu
8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. கொலை மிரட்டல் : போக்சோ சட்டத்தில் ‘காப்பு’ மாட்டிய காவல்துறை !
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். 30 வயதான இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மகாலிங்கம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவியை கடந்த 2 மாதமாக பாலியல் நோக்கத்தோடு தனியாக பேசவேண்டும் என கூறி கட்டாயப்படுத்தியுள்ளார்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மகாலிங்கத்தை எச்சரித்துள்ளனர். இருந்தபோதிலும் மகாலிங்கம் அந்த மாணவியை பின்தொடர்ந்து தனியாக பேச வேண்டும் எனவும், இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மகாலிங்கத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!