Tamilnadu

8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. கொலை மிரட்டல் : போக்சோ சட்டத்தில் ‘காப்பு’ மாட்டிய காவல்துறை !

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். 30 வயதான இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மகாலிங்கம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் பள்ளி மாணவியை கடந்த 2 மாதமாக பாலியல் நோக்கத்தோடு தனியாக பேசவேண்டும் என கூறி கட்டாயப்படுத்தியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மகாலிங்கத்தை எச்சரித்துள்ளனர். இருந்தபோதிலும் மகாலிங்கம் அந்த மாணவியை பின்தொடர்ந்து தனியாக பேச வேண்டும் எனவும், இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மகாலிங்கத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Also Read: ‘முகக்கவசம் எங்கே..?’ : வாகனத்தில் வந்த நபரை அடித்து இழுத்துச் சென்ற ஆந்திரா போலிஸ் - பகீர் சம்பவம் !