Tamilnadu
திருமணமான 5வது நாளில் இளம் பெண் எடுத்த முடிவால் பெற்றோர் அதிர்ச்சி.. விசாரணையில் பகீர்!
சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா. இவருக்குக் கடந்த 4ம் தேதி சேலத்தைச் சேர்ந்த ராஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து இந்த புதுமண தம்பதி சேலத்தில் திருமண விருந்துகளை முடித்துவிட்டு கொரட்டூர் திரும்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குக் கிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சந்தியாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. ஆனால் அவரை கட்டாயப்படுத்தியதன் காரணமாக இந்த திருமணம் நடந்துள்ளது. இதனால் விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததால் சந்தியா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
Also Read
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!