Tamilnadu
திருமணமான 5வது நாளில் இளம் பெண் எடுத்த முடிவால் பெற்றோர் அதிர்ச்சி.. விசாரணையில் பகீர்!
சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா. இவருக்குக் கடந்த 4ம் தேதி சேலத்தைச் சேர்ந்த ராஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து இந்த புதுமண தம்பதி சேலத்தில் திருமண விருந்துகளை முடித்துவிட்டு கொரட்டூர் திரும்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குக் கிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சந்தியாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. ஆனால் அவரை கட்டாயப்படுத்தியதன் காரணமாக இந்த திருமணம் நடந்துள்ளது. இதனால் விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததால் சந்தியா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!