Tamilnadu
திருமணமான 5வது நாளில் இளம் பெண் எடுத்த முடிவால் பெற்றோர் அதிர்ச்சி.. விசாரணையில் பகீர்!
சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா. இவருக்குக் கடந்த 4ம் தேதி சேலத்தைச் சேர்ந்த ராஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து இந்த புதுமண தம்பதி சேலத்தில் திருமண விருந்துகளை முடித்துவிட்டு கொரட்டூர் திரும்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குக் கிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சந்தியாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. ஆனால் அவரை கட்டாயப்படுத்தியதன் காரணமாக இந்த திருமணம் நடந்துள்ளது. இதனால் விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததால் சந்தியா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!