Tamilnadu
ஃபேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட பூசாரி... 'காப்பு' மாட்டிய போலிஸ்!
திருப்பூர் மாவட்டம், கணியூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் வெங்கிட்டாபுரம் கிராமத்தில் உள்ள கோவிலில் பூசாரியாக உள்ளார். திருமணமாகாத இவர் போலியாக ஃபேஸ்புக் கணக்கு ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களைப் பதிவேற்றி வந்துள்ளார்.
இந்த ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்த பாலியல் தொல்லைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் அமைப்பு இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார்கள் அளித்துள்ளது.
இந்தப் புகாரின் பேரில் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலிஸார் வழக்குப் பதிவு செய்து அந்த ஃபேஸ்புக்கின் முகவரியைக் கொண்டு வைத்தியநாதனை போலிஸார் கைது செய்து விசாரணை செய்தனர்.
அப்போது, சிறுமிகளின் ஆபாசப் படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலிஸார் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
சென்னையில் தவறாமல் செல்ல வேண்டிய இடம்... நவீன வசதியுடன் பசுமை பூங்கா... திறந்துவைத்தார் துணை முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மேலும் 37.79 இலட்சம் மக்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்தல்!
-
முத்தமிழறிஞர் கலைஞர் திருமண மாளிகை, புதிய பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!
-
“இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது நிறுத்தும்?”: முரசொலி காட்டம்!
-
100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!