Tamilnadu
பள்ளி மாணவன் தற்கொலை.. போலிஸாரிடம் சிக்கிய கடிதம்: நடந்தது என்ன?
சென்னை அடுத்த மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் அருண் சவுண். இவரது மகன் ஆருஷ். இவர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலையில் இருந்து சிறுவன் ஆருஷ் காணவில்லை. இதையடுத்து சிறுவனை தேடி பார்த்தபோது, அவர் தங்கியிருந்த அடிக்குமாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்தைப் பார்த்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலிஸார் சிறுவன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சிறுவன் வீட்டில் போலிஸார் சோதனை செய்தனர்.
அப்போது தற்கொலைக்கு முன்பு ஆருஷ் எழுதிய கடிதத்தை போலிஸார் கைப்பற்றினர். அதில்,"மன அழுத்தம் அதிகமாக உள்ளதால் என்னால் இந்த உலகத்தில் வாழப் பிடிக்கவில்லை. என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள்" என கூறப்பட்டிருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவன் தற்கொலைக்கு வேறு காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!