Tamilnadu
கூந்தலுக்குள் வைத்து தங்கம் கடத்திய பெண்கள்: சென்னை கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் வசமாக சிக்கியது எப்படி?
இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் பயணிகள் சிறப்பு விமானம் நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணித்து சந்தேகப்பட்ட பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது சென்னையை சோ்ந்த 3 பெண்கள், ஒரு குழுவாக அந்த விமானத்தில் வந்தனா். அவா்கள் தங்களிடம் சுங்கத்தீர்வை செலுத்துவதற்கான பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றனர்.
ஆனால் சுங்க அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவர்களை நிறுத்தி மீண்டும் உள்ளே அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் கூறுவது சம்பந்தமில்லாத பதிலாக இருந்தது.
இதையடுத்து பெண் சுங்க அதிகாரிகள் அந்த 3 பெண் பயணிகளையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று, அவர்களை சோதனையிட்டனர்.
அப்போது அந்தப் பெண்கள் தலையில் அணிந்திருந்த "விக்" எனும் அலங்கார கூந்தலுக்குள் தங்க வளையல்கள், சிறு தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அதோடு அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்கப்பசைகள் அடங்கிய சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்களை மறைத்து வைத்திருந்ததையும் கண்டுப்பிடித்தனா்.
3 பெண்களிடமிருந்து மொத்தம் 525 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் சர்வதேச மதிப்பு ரூபாய் 23 லட்சம்.
இதையடுத்து நூதன முறையில் தலை கூந்தலுக்குள் தங்கத்தை வைத்து கடத்தி வந்த இந்த 3 இளம்பெண்களையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். அவா்களிடம் மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!