Tamilnadu
நகைக்காக சிறுவனை கொன்று பீரோவில் பூட்டிவைத்த பெண்.. விசாரணையில் வெளிவந்த கொடூரம்!
கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் ரிச்சார்ட்டு. இவரது மனைவி சகாய சில்ஜா. இந்த தம்பதிக்கு ஜோகன் ரிஷி என்ற மகன் உள்ளார். கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் தனது குழந்தைகளுடன் சகாய சில்ஜா தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், சிறுவன் ஜோகன் ரிஷி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். இப்போது திடீரென சிறுவன் காணவில்லை. இதையடுத்து சிறுவனைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
பின்னர், சிறுவன் காணாதது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்கு பதிவு செய்து பக்கத்து வீட்டில் சிக்கும் பாத்திமா என்ற பெண்ணை போலிஸார் விசாரணை செய்தனர்.
அப்போது, பொதுமக்கள் பாத்திமா வீட்டிற்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில் வீட்டிலிருந்த பீரோ உடைந்து கதவு திறந்தபோது சிறுவன் வாயில் துணியால் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலிஸார் விசாரணையில், சிறுவன் அணிந்திருந்த நகைக்காக ஆசைப்பட்டு அவனை வீட்டிற்கு தூக்கிச் சென்று கொலை செய்து பீரோவில் பூட்டியாக பாத்திமா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தங்க நகைக்கு ஆசைப்பட்டு சிறுவனைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பக்காவாக முடிந்த தேர்தல் அறிக்கை பணி.. அடுத்த டார்கெட்.. பிரச்சாரத்தை தொடங்கும் கனிமொழி எம்.பி…!
-
பா.ஜ.க-வையும் அ.தி.மு.க-வையும் விரட்டியடிப்போம் : காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன் எதற்கு? - கலைஞரை வைத்து விளக்கம் கொடுத்த கனிமொழி எம்.பி.! - விவரம்!
-
மாவட்டம்தோறும் ‘செஸ் பயிற்சி மையங்கள்' : விளையாட்டு துறைக்கு 19 தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க!
-
திருநர் - திருநங்கையர் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் தி.மு.க : 3 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு!