கைதான தினேஷ்
Tamilnadu
கத்திக்குத்தில் முடிந்த வாக்குவாதம்: பலியான இளைஞர்; சிக்கிய கஞ்சா வியாபாரி - அம்பலமான பகீர் தகவல்கள்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே வாரணவாசி பகுதியை சேர்ந்தவர் சந்துரு (26). இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றார். இதே பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (25). இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வாரணவாசியில் உள்ள சலூன் கடையில் அமர்ந்து இருப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஜன.,11) மாலை சந்துருவுக்கும், தினேஷுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த மோதலில் சந்துருவை தினேஷ் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகின்றது. படுகாயமடைந்த சந்துருவை மீட்ட அப்பகுதி மக்கள் திருப்பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சந்துரு சிகிச்சை பலன் இன்றி சந்துரு பரிதாபமாக மருத்துவமனையிலேயே உரிழந்தார்.
இதனையடுத்து உயிரிழந்த சந்துருவின் தந்தை ஜெகதீசன் (43) கொடுத்த புகைரை தொடர்ந்து தலைமறைவாக உள்ள தினேஷ் மீது ஒரகடம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதில், உயிரிழந்த சந்துரு மது போதையில் இருந்ததாகவும் கொலை செய்துவிட்டு தலைமறைவான தினேஷ் கஞ்சா போதையில் இருந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த குற்றவாளியான தினேஷை ஒரகடம் காவல்துறையினர் கைது செய்தனர்.
உயிரிழந்த சந்துரு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதிகள்தான் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை. இந்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் வட மாநில இளைஞர்களுக்கு தினேஷ் கஞ்சா விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. வாரணவாசி பகுதியில் உள்ள சலூன் கடையில் வைத்துதான் தினேஷ் கஞ்சா விற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்திருக்கிறார்.
மேலும் கஞ்சா வியாபாரியான தினேஷ் யாரிடம் கஞ்சாவை வாங்கி இந்த பகுதியில் விற்பனை செய்து வருகிறார், எந்த மாநிலத்தில் இருந்து கஞ்சா வரவைக்கப்படுகிறது, கஞ்சா விற்பனை கும்பலின் தலைவன் யார் என பல கோணங்களில் போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். சந்துருவை கொலை செய்த விவகாரம் குறித்து விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Also Read
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
-
“மரியாதையும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது குழந்தைகளின் உரிமை!” : கனிமொழி எம்.பி!