Tamilnadu
மொட்டை மாடியில் இருந்து குதித்த போது இறந்தே பிறந்த ஆண் குழந்தை; IIT மாணவி கவலைக்கிடம்; சென்னையில் பகீர்!
சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 53. இவரது மனைவி சாவித்திரி மற்றும் மகள் (21). மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். ராஜேந்திரன் சினிமா துறையில் லைட் மேனாக வேலை செய்து வருகிறார். மகள் கிண்டியில் உள்ள ஐடிஐ யில் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் எட்டு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். நேற்று இரவு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து திடீரென கீழே குதித்ததில் சம்பவ இடத்தில் இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாணவி அனுமதிக்கப்பட்ட போது மருத்துவரின் ஆலோசனைப்படி மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இறந்த நிலையில் பிறந்த ஆண் குழந்தையை கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனையில் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 316 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!