Tamilnadu
“எனக்கு வாழத் தகுதியில்ல.. மன்னிச்சிடுங்க”: ஆன்லைன் ரம்மியால் ரூ.5 லட்சம் இழந்த இளைஞர் விபரீத முடிவு!
திருப்பூர் மாவட்டம் பாளையக்காடு ராஜமாமா பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மீனா. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சுரேஷ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் ரம்வி விளையாடி வந்துள்ளார். இதில் சேமித்து வைத்திருந்த ரூ. 5 லட்சம் பணத்தை இழந்துள்ளார். இதனால் சில நாட்களாக சுரேஷ் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதையடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர், அவரது வீட்டில் சோதனை செய்தபோது தற்கொலைக்கு முன்பாக சுரேஷ் எழுதிய கடிதம் ஒன்றை போலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் பணத்தை இழந்துவிட்டேன். எனக்கு வாழத் தகுதியில்லை. என்னை மன்னித்து விடுங்கள் என எழுதியிருந்ததாக போலிஸார் கூறியுள்ளனர்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!