Tamilnadu
"பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை": அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!
திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜ.பெரியசாமி," மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாலியல் கொடுமைகளை யார் செய்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் காட்டப்படாது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவிகள் என்ன கோரிக்கை வைக்கிறோர்களோ அந்தக் கோரிக்கையைக் கண்டிப்பாகத் தமிழ்நாடு அரசு ஏற்று அவர்களுக்கு உதவியாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!