Tamilnadu
"பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை": அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!
திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜ.பெரியசாமி," மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாலியல் கொடுமைகளை யார் செய்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் காட்டப்படாது.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவிகள் என்ன கோரிக்கை வைக்கிறோர்களோ அந்தக் கோரிக்கையைக் கண்டிப்பாகத் தமிழ்நாடு அரசு ஏற்று அவர்களுக்கு உதவியாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!