Tamilnadu
இளம்பெண்ணின் கழுத்தில் சிக்கிய 7.5 செ.மீ தையல் ஊசி.. உயிரைக் காப்பாற்றிய கோவை அரசு மருத்துவமனை!
கோவை தியாகராய நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2ஆம் தேதி கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அந்த இளம்பெண்ணுக்குச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்குக் கழுத்தில் தொடர்ந்து வலி இருந்துள்ளது. இதனால் அவருக்கு மருத்துவர்கள் CT ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்தனர்.
அப்போது அவரது கழுத்து தண்டுவட பகுதியில் 7.5 செ.மீ. தையல் ஊசி இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இவரது குடும்பத்தினரிடம் இது குறித்து மருத்துவர்கள் கேட்டபோது, தையல் ஊசியை குத்தி தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்துள்ளனர்.
பின்னர் தையல் ஊதி மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் அருகே இருந்ததால் அறுவை சிகிச்சை செய்வது மருத்துவர்களுக்கு சவாலாக இருந்துள்ளது. இருப்பினும் தண்டுவட, ரத்தநாள, காதுமூக்கு தொண்டை அடங்கிய மருத்துவக் குழுவினர் அந்த இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து 7.5 செ.மீட்டர் நீளமுள்ள தையல் ஊசியை வெளியே எடுத்தனர்.
இதையடுத்து அந்தப் பெண் தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும் இனி அவரது உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவர்களின் இந்த சிறப்பான சிகிச்சைக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Also Read
-
அசாம் பா.ஜ.க.வின் வெளிப்படையான வெறுப்பு! : இஸ்லாமியர்களை அச்சுறுத்துவதற்காக தண்டனை இல்லையா?
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!