Tamilnadu
“இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் நடந்த பாலியல் வன்கொடுமை” : 14 சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது!
சென்னை மணலியில் 14 வயது சிறுமியை இன்ஸ்டாகிராமில் பழகி ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காணவில்லை என்று மணலி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் பேரில் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில், திருவாரூர் மாவட்டம் திருராமேஸ்வரம் கோட்டகச்சேரி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கோபிநாத் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஊருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் வல்லுறவும் செய்ததாக தெரியவந்தது.
இதனையடுத்து எண்ணூர் அணைத்து மகளிர் போலிஸார் 14 வயது சிறுமியை மீட்டு இன்ஸ்டாகிராமில் மோசடியில் ஈடுபட்ட கோபிநாத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“சீரழியும் சிறைத்துறை... கண்டுகொள்ளாத நிர்மல்குமார்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
-
“சபரி வர்மன் காவல் மரணம்.. கொடூரமான துறையாக முதல்வர் விஜயின் உள்துறை உள்ளது” : கீதா ஜீவன் காட்டம்!
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!