Tamilnadu
“பிறந்த நாளில் ரயிலில் பாய்ந்து தேசிய வாலிபால் வீரர் தற்கொலை” : புதுச்சேரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த ஆத்துவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தியின். அவரது மகன் தமிழ்மணி. இவர் ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். மேலும் இவர் தேசிய வாலிபால் மற்றும் தடகள வீரர் ஆவார்.
இந்நிலையில், ஜீவானந்தம் வழக்கம்போல் பயிற்சிக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, இன்று காலை வீட்டிலிருந்து சென்றுள்ளார். பிறகு வரும் வழியில் அரும்பார்த்தபுரம் ரயில்வே ட்ராக் அருகே வந்து சிறிது நேரம் அமர்ந்துள்ளார்.
அப்போது விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த பயணிகள் ரயில் வந்துகொண்டிருந்தது. திடீரென ஜீவானந்தம் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார். இதனால் ரயில் அவர்மீது ஏறி இறங்கியதில் அவரின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று அவரின் பிறந்த நாள் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு வந்த போலிஸார் ஜீவானந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!