Tamilnadu
“எங்களுக்கு நிறைய வேலை இருக்குங்க அண்ணாமலை..” : அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!
தமிழ்நாடு மின்சாரம் மற்றும் பகிர்மான கழகத் தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னகம் - நுகர்வோர் சேவை மைய செயற்பாடுகள் மற்றும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினார்.
பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்ள சிலர் அவதூறான தகவல்களை வெளியிடுகிறார்கள். அண்ணாமலை வேலையில்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது.
குறிப்பாக, குற்றச்சாட்டு சொல்லும் அண்ணாமலை ஆதாரம் உள்ளது என்று கூறுகிறார். எப்போது எங்கே அவர் அதை வெளியிட்டாலும் நான் வர தயார். ஆதாரங்களை வெளியிடவில்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மேலும் சமூக வலைதளங்களில் போகிற போக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேலையில்லாதவர்கள் சுமத்த கூடாது. அதுவும் பொதுவெளியில் அண்ணாமலை போன்றோர் குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி சுமத்தக்கூடாது. அரசின் மீது அவதூறு பரப்புவதை நாங்கள் சும்மா பார்த்து கொண்டு இருக்க மாட்டோம்.
மேலும் அரசின் மீது ஆதாரத்துடன் குற்றம் சுமத்தினால் நாங்கள் விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். மின்துறையில் அனைத்து திட்ட பணிகளையும் வெளிப்படை தன்மையுடன் அரசு நிறைவேற்றி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!