Tamilnadu
பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி ரூ.10 லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி... 3 பேர் கைது : நடந்தது என்ன?
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் 1992ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளியரைக்குப்பம் கிராமத்தில் 2,400 சதுர அடியில் வீட்டுமனை வாங்கி பத்திரப் பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து செங்குன்றத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் பெயர் ஒற்றுமையைப் பயன்படுத்தி பெரம்பூர் மோகனின் வீட்டுமனையை போலியாக ஆவணம் செய்து 2008ஆம் ஆண்டு வேறு ஒருவருக்கு விற்றுள்ளார்.
இதனை அறிந்து பெரம்பூர் மோகன் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் இந்த மோசடிக்கு திருநின்றவூரைச் சேர்ந்த வேலாயுதம், திருவள்ளூரைச் சேர்ந்த முனிரத்தினம் ஆகிய இருவர் உடந்தையாக இருந்ததும் பெரம்பூர் மோகனுக்குத் தெரியவந்துள்ளது.
பின்னர், இந்த நில மோசடி குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலிஸார் தலைமறைவாக இருந்த செங்குன்றத்தைச் சேர்ந்த மோகன், வேலாயுதம், முனிரத்தினம் ஆகிய மூன்று பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி செய்து விற்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
Also Read
-
“கேப்டன் விஜயகாந்த் புகழ் ஓங்குக” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி!
-
“மீலாதுன் நபியைக் கொண்டாடிடும் இசுலாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
கர்நாடகாவில் 3 தமிழர்கள் படுகொலை: தொடர் சித்திரவதை.. முறிந்த விலா எழும்பு.. Post Mortem அறிக்கை சொல்வது?
-
இது சமூக அநீதி இல்லையா? மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுத்தால் நட்டம் வந்துவிடுமா?: தவெக அரசுக்கு தீபக் கேள்வி
-
“பத்திரிக்கைகளைப் பற்றி இப்படிப் பேசக் கூடாது” : பேரவையில் தவெக அமைச்சருக்கு அறிவுரை வழங்கிய தி.மு.க!