Tamilnadu
வீட்டின் அருகில் சுற்றித் திரிந்த நல்ல பாம்பு.. 6 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி - சோகத்தில் கிராம மக்கள்!
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த செரப்பனஞ்சேரி நாட்டரசன் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவருக்கு 6 வயதில் சச்சின் என்ற குழந்தையும் இரண்டரை வயதில் விக்னேஷ் என்ற குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று சச்சின் மற்றும் விக்னேஷ் வீட்டு அருகில் உள்ள வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக நல்லபாம்பு சச்சினை கடித்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்துபோன ராமு மற்றும் உறவினர்கள் சச்சினை உடனடியாக பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் சச்சினை கடித்த பாம்பை அடித்து கொன்றனர்.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் சச்சின் உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற மணிமங்கலம் காவல்துறையினர் சச்சினின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 6 வயது சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!