Tamilnadu
தொண்டையில் சிக்கிய கோலிக் குண்டு.. 3 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் அகற்றிய அரசு மருத்துவமனை!
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மகன் அஸ்வின். சிறுவன் அஸ்வின் நேற்று முன்தினம் நண்பர்களுடன் தெருவில் கோலி விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அஸ்வின் கோலி குண்டை ஒன்று வாயில் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அது திடீரென அவரது தொண்டைக்குள் கோலி குண்டு சிக்கிக் கொண்டது. இதனால் சிறுவன் வலிதாங்க முடியாமல் துடித்துள்ளார்.
பிறகு, உடனே சிறுவனை மீட்டு, அப்பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் சிறுவனைப் பரிசோதித்து விட்டு மேல் சிகிச்சைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு சிறுவன் அஸ்வினுக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கப்பட்டது. இதில் கோலி குண்டு சிறுவனின் தொண்டையில் சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ குழுவினர் என்டோஸ்கோபி முறையில் 3 மணி நேரத்தில் அறுவை சிகிச்சையின்றி கோலி குண்டை வெளியே எடுத்தனர்.
இதையடுத்து சிறுவன் அஸ்வினுக்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை என மருத்துவர்கள் தெரித்துள்ளது. சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு அவரது பெற்றோர்கள் நன்றி தெரிவித்துப் பாராட்டினர். மேலும் பலரும் அரசு மருத்துவமனை ஊழியர்களை பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!