Tamilnadu
“வாகனத்தில் படுத்து தூங்கிய இளைஞரால் பீதியடைந்த வாகன ஓட்டிகள்” : நடுரோட்டில் நடந்தது என்ன தெரியுமா?
மதுரையின் முக்கியமான போக்குவரத்து நிறைந்த சாலையாக மதுரை தமிழ்ச் சங்கம் சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே நேற்று மாலை சரக்கு வாகனம் ஒன்று நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது.
இதனால், அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் சரக்கு வாகனத்தின் ஓட்டுனர் தனது இரண்டு கால்களை வெளியே நீட்டியவாறு படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். பலரும் அவரை எழுப்பு முயற்சி செய்தபோதும் அவர் அசையாமல் இருந்தார்.
இதனால் பதட்டமடைந்த மற்ற வாகன ஓட்டிகள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு வந்த போலிஸாரும் சரக்கு வாகன ஒட்டியை எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால் அந்த நபர் எழுந்திருக்கவில்லை.
பின்னர் போலிஸார் வாக்கி டாக்கி ஒலி கேட்டு சட்டென எழுந்த அந்தநபர் சுற்றி ஆட்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு போலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், எல்லீஸ் நகரை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது.
இவர் நேற்று மாலை ஒத்தக்கடை பகுதியில் சரக்கு ஏற்றிவிட்டு சிம்மல் நோக்கி செல்லும் போது குடித்து விட்டு வாகனத்தைச் சாலையிலேயே நிறுத்திவிட்டுத் தூங்கியதாக தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவருக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
Also Read
-
தொடரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டம் : ஹரியானாவில் மேலும் ஒரு பெண் விவசாயி உயிரிழப்பு !
-
“பிரிஜ் பூஷன் குற்றவாளி இல்லை” - பிரிஜ் மகனுக்கு பாஜக சீட் கொடுத்தது தொடர்பாக நிர்மலா சீதாராமன் விளக்கம்!
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!