Tamilnadu
பிரியாணி சாப்பிட்டா காசு கேப்பியா? கத்தியை காட்டி மிரட்டி மாமுல் கேட்டு ரவுடி ரகளை!
சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்த இதயத்துல்லா. இவர் அதே பகுதியில் பிஸ்மில்லா என்ற பெயரில் பீப் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை கடைக்கு வந்த இருவர் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர். இதனையடுத்து கடையின் உரிமையாளர் இதயத்துல்லா பிரியாணி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட போது கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் பணம் கேட்டுள்ளனர்.
பணம் கொடுக்காததால் கத்தியால் வெட்ட முயன்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கடை உரிமையாளர் இதயதுல்லா திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொழுது சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ நகர் பகுதியைச் சேர்ந்த நாய் பல்லு அப்பு (எ) டேனியலை போலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி தலைமறைவாக உள்ள லாலூ (எ) சாகுல்ஹமீதை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!