Tamilnadu
வன்கொடுமை செய்து சிறுமியின் கருவைக் கலைத்த வாலிபர்.. உடந்தையாக இருந்த குடும்பம் : 4 பேர் கைது!
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி ராஜா. இவரது தனது தங்கையின் தோழியைக் காதலித்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
இது குறித்து பூபதி ராஜாவிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவைக் கலைத்துள்ளார்.
பின்னர், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் பூபதி ராஜாவின் பெற்றோரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். அப்போது அவர்களும் சிறுமியை மிரட்டியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் பூபதி ராஜா, அவரது தந்தை துரை, தாய் சுசீலா நண்பர் சௌந்தர பாண்டியன் ஆகிய நான்கு பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !