Tamilnadu
வன்கொடுமை செய்து சிறுமியின் கருவைக் கலைத்த வாலிபர்.. உடந்தையாக இருந்த குடும்பம் : 4 பேர் கைது!
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி ராஜா. இவரது தனது தங்கையின் தோழியைக் காதலித்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
இது குறித்து பூபதி ராஜாவிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவைக் கலைத்துள்ளார்.
பின்னர், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண் பூபதி ராஜாவின் பெற்றோரிடம் இது குறித்து முறையிட்டுள்ளார். அப்போது அவர்களும் சிறுமியை மிரட்டியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் பூபதி ராஜா, அவரது தந்தை துரை, தாய் சுசீலா நண்பர் சௌந்தர பாண்டியன் ஆகிய நான்கு பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!