Tamilnadu
10ம் வகுப்பு மாணவியை மிரட்டிய ஜிம் பயிற்சியாளர் கைது: போக்சோ சட்டத்தின் கீழ் தொடரும் தமிழக அரசின் அதிரடி!
திருவள்ளூர் அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (21). இவர் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருவதுடன் அதன் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அரவிந்தன் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய 10 ஆம் வகுப்பு மாணவியை செல்போனில் ஆபாச படம் எடுத்து அதை காட்டி மிரட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இது குறித்து மாணவியின் தாயார் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் (பொ) லில்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணையில் மாணவி ஆன்லைன் வகுப்பு கற்க வாங்கிய செல்போனில் அரவிந்தன் ஆபாசப் படங்களை எடுத்து காண்பித்து மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் (பொ) லில்லி அரவிந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Also Read
-
கச்சத்தீவு விவகாரம் : “இலங்கை அதிபரின் பேச்சு, இருநாட்டு உறவுக்கு எதிரானது” - CPI முத்தரசன் கண்டனம்!
-
முதலமைச்சரின் ஜெர்மனி பயணம் மூலம் ரூ.7020 கோடி முதலீடு... 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி !
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !