Tamilnadu
“அறுவை சிகிச்சை மாத்திரைகளை வாங்கி போதை மருந்தாக விற்ற கும்பல்” : போலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் !
சென்னை புதுவண்ணாரப்பேட்டை அம்மனியம்மன் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிஸார் இவரது இடத்தில் சோதனை செய்தனர்.
அப்போது மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகளைக் கூடுதல் விலைக்குப் போதை மருந்தாக விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் போலிஸார் அவரிடமிருந்து 1,300 அறுவை சிகிச்சை மாத்திரைகள் மற்றும் 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் உள்ள மெடிக்கல் ஷாப்களில் இருந்து அறுவை சிகிச்சை மாத்திரைகளை வாங்கி வந்து போதை ஆசாமிகளுக்கு விற்பனை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில் சூர்யா, தினேஷ்குமார் என்ற இரண்டு பேரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் மற்ற நபர்களை போலிஸார் தேடி வருகின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படம் வலி நிவாரணி மாத்திரைகளைப் போதை மாத்திரையாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!