Tamilnadu
சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தட்டிக் கேட்ட பெற்றோரிடம் வீடியோ காட்டி மிரட்டியவர் கைது!
திருப்பூர் மாவட்டம், ராஜாபூரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும், சிறுமியிடம் நெருக்கமாக இருந்தபோது அதை வீடியோ எடுத்துள்ளார். இதை காட்டி தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி இது குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் இது குறித்து சிவராஜிடம் சிறுமியின் பெற்றோர் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது வீடியோவை காட்டி வெளியே சொன்னால் உங்கள் குடும்ப மானமே போய்விடும் என கூறி மிரட்டியுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிவராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!