Tamilnadu
சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தட்டிக் கேட்ட பெற்றோரிடம் வீடியோ காட்டி மிரட்டியவர் கைது!
திருப்பூர் மாவட்டம், ராஜாபூரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும், சிறுமியிடம் நெருக்கமாக இருந்தபோது அதை வீடியோ எடுத்துள்ளார். இதை காட்டி தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி இது குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் இது குறித்து சிவராஜிடம் சிறுமியின் பெற்றோர் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது வீடியோவை காட்டி வெளியே சொன்னால் உங்கள் குடும்ப மானமே போய்விடும் என கூறி மிரட்டியுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிவராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!