Tamilnadu
சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தட்டிக் கேட்ட பெற்றோரிடம் வீடியோ காட்டி மிரட்டியவர் கைது!
திருப்பூர் மாவட்டம், ராஜாபூரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும், சிறுமியிடம் நெருக்கமாக இருந்தபோது அதை வீடியோ எடுத்துள்ளார். இதை காட்டி தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி இது குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் இது குறித்து சிவராஜிடம் சிறுமியின் பெற்றோர் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது வீடியோவை காட்டி வெளியே சொன்னால் உங்கள் குடும்ப மானமே போய்விடும் என கூறி மிரட்டியுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிவராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!