Tamilnadu
“பெட்ரோல் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கும் போது தீ விபத்து” : முதியவரின் விபரீத முடிவால் நடந்தது என்ன?
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் அருகில் உள்ள பொன்னமராவதி பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்துவிட்டு வீட்டுக்கு ஓட்டி வந்துள்ளார். அப்படி வரும் வழியிலேயே பாதிலேயே வாகனம் நின்றுள்ளது. இதனையடுத்து தனது இருசக்கர வாகனத்தில் பெற்றோர் இருக்கா என்பதை பார்ப்பதற்காக, பெட்ரோல் டேங்கை திறந்து தீக்குச்சியை உரசிப் பற்ற வைத்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக பெட்டோல் டேங்கில் இருந்து தீ பிடித்து, தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதில் தீ பரவியதில் தியாகராஜன் விலகியதால் காயமின்றி தப்பித்தார். இதனையடுத்து வாகனம் முழுவதும் தீப்படித்து எரிந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயைக் அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !
-
பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
சிறந்த கைவினைஞர்களுக்கு மாநில விருதுகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!