Tamilnadu
“பெட்ரோல் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கும் போது தீ விபத்து” : முதியவரின் விபரீத முடிவால் நடந்தது என்ன?
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் அருகில் உள்ள பொன்னமராவதி பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்துவிட்டு வீட்டுக்கு ஓட்டி வந்துள்ளார். அப்படி வரும் வழியிலேயே பாதிலேயே வாகனம் நின்றுள்ளது. இதனையடுத்து தனது இருசக்கர வாகனத்தில் பெற்றோர் இருக்கா என்பதை பார்ப்பதற்காக, பெட்ரோல் டேங்கை திறந்து தீக்குச்சியை உரசிப் பற்ற வைத்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக பெட்டோல் டேங்கில் இருந்து தீ பிடித்து, தீ மளமளவென எரியத் தொடங்கியது. இதில் தீ பரவியதில் தியாகராஜன் விலகியதால் காயமின்றி தப்பித்தார். இதனையடுத்து வாகனம் முழுவதும் தீப்படித்து எரிந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயைக் அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”இது நம்ம ஆட்டம் 2026”- மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய துணை முலமைச்சர் உதயநிதி
-
உலகளவில் முதன்முறையாக.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் கட்டப்பட்டு மேம்பாலம்! - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!
-
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் : இந்திய அளவில் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் முன்னேற்றம்!
-
என்ன சாதித்தார் காப்பி அடிக்க...? : எந்தக் கூச்சமும் இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்தான் பழனிசாமி!
-
46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள்... அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?