Tamilnadu
“சண்டையின்போது ஆத்திரம்... கொதிக்கும் வெந்நீரை ஊற்றி கணவனை கொலை செய்த மனைவி” : தஞ்சையில் கொடூரம்!
தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன். 62 வயதாகும் சின்னையன் விவசாயக் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வீரம்மாளுக்கும் சின்னையனுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி இரவு வீரம்மாளுக்கும் சின்னையனுக்கு இடையே பிரச்சனை அதிகரித்துள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், கணவன் மீது இருந்த ஆத்திரத்தில் வீட்டின் அடுப்பில் இருந்த வெந்நீரை எடுத்து ஊற்றிள்ளார் வீரம்மாள்.
கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை ஊற்றியதால் சின்னையன் வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து சின்னையனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சின்னையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து வல்லம் போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து வீரம்மாளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!