Tamilnadu
“சண்டையின்போது ஆத்திரம்... கொதிக்கும் வெந்நீரை ஊற்றி கணவனை கொலை செய்த மனைவி” : தஞ்சையில் கொடூரம்!
தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன். 62 வயதாகும் சின்னையன் விவசாயக் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வீரம்மாளுக்கும் சின்னையனுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி இரவு வீரம்மாளுக்கும் சின்னையனுக்கு இடையே பிரச்சனை அதிகரித்துள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், கணவன் மீது இருந்த ஆத்திரத்தில் வீட்டின் அடுப்பில் இருந்த வெந்நீரை எடுத்து ஊற்றிள்ளார் வீரம்மாள்.
கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை ஊற்றியதால் சின்னையன் வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து சின்னையனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சின்னையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து வல்லம் போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து வீரம்மாளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
RGNIYD நிறுவனத்தில் RSS தலைமையைக் கொண்டுவர சூழ்ச்சி : விடுதலை நாளேடு எச்சரிக்கை!
-
”ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கும்” : ராகுல் காந்தி அதிரடி!
-
”பா.ஜ.க.வின் தோல்வி தவிர்க்க முடியாதது” : காரணத்தை பட்டியலிட்ட அகிலேஷ்!
-
”காங்கிரஸ் வென்றால் இந்துக்களுக்கு என்று ஒரு நாடே இருக்காது” : மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் பாஜக!
-
அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்பு எடுக்கக் கூடாது - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு !