Tamilnadu
“சண்டையின்போது ஆத்திரம்... கொதிக்கும் வெந்நீரை ஊற்றி கணவனை கொலை செய்த மனைவி” : தஞ்சையில் கொடூரம்!
தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன். 62 வயதாகும் சின்னையன் விவசாயக் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வீரம்மாளுக்கும் சின்னையனுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி இரவு வீரம்மாளுக்கும் சின்னையனுக்கு இடையே பிரச்சனை அதிகரித்துள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், கணவன் மீது இருந்த ஆத்திரத்தில் வீட்டின் அடுப்பில் இருந்த வெந்நீரை எடுத்து ஊற்றிள்ளார் வீரம்மாள்.
கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை ஊற்றியதால் சின்னையன் வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து சின்னையனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சின்னையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து வல்லம் போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து வீரம்மாளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!