Tamilnadu
IAS ஆ, IPS ஆ.. பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு : ஹெச்.ராஜா வாயைத் திறந்தாலே உற்சாகம் ஆகும் இணையவாசிகள்!
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.என்.ரவி பிஹார் மாநிலம் பாட்னாவில் பிறந்தவர். கல்லூரி படிப்பை முடித்ததும் பத்திரிக்கையாளராக பணியாற்றிய ஆர்.என்.ரவி, அதன் பிறகு கேரளாவில் ஐ.பி.எஸ் படித்து தேர்ச்சி பெற்றார்.
கேரளா கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியாக 10 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு புலனாய்வுத் திறமையில் உளவுத் துறையான இன்டெலிஜென்ஸ் பீரோ, தீவிரவாதக் குழுக்களைக் கட்டுப்படுத்தும் குழுவின் ஐ.பி மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் என பல பெறுப்புக்களில் பணியாற்றிவிட்டு 2019ம் ஆண்டு நாகாலாந்துக்கு ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனிடையே, வழக்கம் போல, தனது பேச்சுக்கள் மூலம் இணைய வாசிகளை குஷி படுத்தியுள்ளார் ஹெச்.ராஜா.
தமிழ்நாட்டுக்கு ஆளுநராக நியமிகப்பட்டுள்ள ஆர்.என்.ரவி யார் என்றுக்கூட முழுவதுமாக படிக்காமல் போறகிற போக்கில் ஹெச்.ராஜா சொன்ன வாழ்த்துச் செய்திதான் இப்போது இணையத்தில் வைரல் கண்டன்ட்.
புதிய ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்து ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “Naga Insurgency பிரச்சினையில் மிகச்சிறப்பாக கையாண்டு தீர்வு கண்ட முன்னாள் IAS அதிகாரி திரு. R.N.ரவி அவர்கள் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆகவே அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதில், IPS என்பதற்கு பதிலாக IAS எனக் குறிப்பிட்டுள்ள ஹெச்.ராஜாவின் பதிவை கையில் எடுத்த நெட்டிசன்கள், “IAS ஆ, IPS ஆ பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு” போன்ற மீம்ஸ்கள் மூலம் கலாய்த்து வருகின்றனர். மேலும் வாழ்த்துச் சொல்லும் முன் அவர் யார் என்பதை தெரிந்துக்கொண்டு வாழ்த்துச் சொல்லவும் என விமர்சித்து வருகின்றனர். மேலும் இத்தகைய விமர்சனத்துக்கு பிறகு ஹெச்.ராஜா தனது பதிவை திருத்தியுள்ளார்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!