Tamilnadu
சசிகலாவின் பையனூர் பங்களா உள்ளிட்ட ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்.. பினாமி தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை!
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்து வந்தார்.
சசிகலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவர் சிறையில் இருந்த காலத்தில் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது தொடர்பான வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையை அடுத்த பையனூரில் 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு சொந்தமான பங்களா சொத்து முடக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில் பினாமி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சசிகலா தொடர்புடைய பங்களாவை முடக்கி வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பினாமி சட்டத்தின் கீழ் சசிகலா தொடர்புடைய 1,600 கோடி சொத்துக்கள் 2019ஆம் ஆண்டு ஏற்கனவே முடக்கப்பட்டன. கொடநாடு தேயிலை எஸ்டேட், சிறுதாவூர் உட்பட 65 சொத்துக்கள் 2020ஆம் ஆண்டு முடக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”