Tamilnadu
சசிகலாவின் பையனூர் பங்களா உள்ளிட்ட ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்.. பினாமி தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை!
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்து வந்தார்.
சசிகலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவர் சிறையில் இருந்த காலத்தில் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது தொடர்பான வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையை அடுத்த பையனூரில் 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு சொந்தமான பங்களா சொத்து முடக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில் பினாமி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சசிகலா தொடர்புடைய பங்களாவை முடக்கி வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பினாமி சட்டத்தின் கீழ் சசிகலா தொடர்புடைய 1,600 கோடி சொத்துக்கள் 2019ஆம் ஆண்டு ஏற்கனவே முடக்கப்பட்டன. கொடநாடு தேயிலை எஸ்டேட், சிறுதாவூர் உட்பட 65 சொத்துக்கள் 2020ஆம் ஆண்டு முடக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?