Tamilnadu
"ஆமாங்க.. அதிமுக ஆட்சியில் துணி தரமில்லாமத்தான் இருந்துச்சு" : EPS-க்கு சவால் விட்ட அமைச்சர் துரைமுருகன்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "கைத்தறித்துறை அமைச்சர் காந்தி நேற்று பேசும்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் உள்ள துணிகள் தரமற்றுள்ளதாக குறிப்பிட்டார். இது கூட்டுறவு நெசவாளர்களை அவமதிக்கும்படி உள்ளது" என்றார்.
அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, "கோ-ஆப்டெக்ஸில் கடந்த ஆட்சியில் தரமற்ற வகையில் துணிகள் வாங்கப்பட்டுள்ளது. இதனால் துணிகள் விற்பனையாகவில்லை. இதையடுத்து ரூபாய் 4 கோடி செலவு செய்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
யாரிடமிருந்து துணி வாங்கினோம் என்பது பிரச்சனையில்லை. தரமற்ற துணிக்காக 4 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதைத்தான் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த ஆட்சியை விட தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என நான் சவால் விடுகிறேன்" எனத் தெரிவித்தார்.
இந்த விவாதத்தின்போது பேசிய கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, “அ.தி.மு.க ஆட்சியில், தனியார்கள் கூட்டுறவு சங்கங்களில் தங்களுடைய துணிகளை கொடுத்து, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் விற்பனை செய்ததற்கான ஆதாரம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
பிரதமர் மோடி பாட வேண்டியது ‘வந்தே ஏமாத்துறோம்' : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!