Tamilnadu
"ஆமாங்க.. அதிமுக ஆட்சியில் துணி தரமில்லாமத்தான் இருந்துச்சு" : EPS-க்கு சவால் விட்ட அமைச்சர் துரைமுருகன்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "கைத்தறித்துறை அமைச்சர் காந்தி நேற்று பேசும்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் உள்ள துணிகள் தரமற்றுள்ளதாக குறிப்பிட்டார். இது கூட்டுறவு நெசவாளர்களை அவமதிக்கும்படி உள்ளது" என்றார்.
அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, "கோ-ஆப்டெக்ஸில் கடந்த ஆட்சியில் தரமற்ற வகையில் துணிகள் வாங்கப்பட்டுள்ளது. இதனால் துணிகள் விற்பனையாகவில்லை. இதையடுத்து ரூபாய் 4 கோடி செலவு செய்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
யாரிடமிருந்து துணி வாங்கினோம் என்பது பிரச்சனையில்லை. தரமற்ற துணிக்காக 4 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதைத்தான் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த ஆட்சியை விட தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என நான் சவால் விடுகிறேன்" எனத் தெரிவித்தார்.
இந்த விவாதத்தின்போது பேசிய கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, “அ.தி.மு.க ஆட்சியில், தனியார்கள் கூட்டுறவு சங்கங்களில் தங்களுடைய துணிகளை கொடுத்து, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் விற்பனை செய்ததற்கான ஆதாரம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !
-
பாலியல் வழக்கு : தொடர்ந்து எழும் புகார்... கர்நாடக முன்னாள் அமைச்சர் HD ரேவண்ணா அதிரடி கைது !
-
புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !