Tamilnadu
“தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பது முக்கியமான ஒன்று” : WHO விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பாராட்டு !
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள ஆனைகட்டி உள்ளிட்ட பழங்குடியினர் கிராமங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பழங்குடியின மக்களின் உடல்நிலை, வாழ்வாதார சூழல் உள்ளிட்டவைகள் குறித்து அந்த மக்களிடமே கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போதைய சூழலில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது என்பது அவசியமான ஒன்று. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்வி ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக, ஏழை மாணவர்கள் பள்ளி திறக்கப்படாத காரணத்தினால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து இருக்கின்றனர். ஒரு வேளை குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டாலும் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் கொரோனா தடுப்பில் மிகச்சிறப்பாக செயல்படுகிறார்கள். மேலும் இருக்கக்கூடிய மக்களுக்கும் இரண்டு தவனை தடுப்பூசிகள் செலுத்தி விட்டால் மக்கள் மேலும் பாதுகாப்பாக இருக்கலாம். பொதுமக்கள் தொடர்ந்து முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, சுகாதார முறைகளைக் கையாள்வது, கூட்டம் கூடுவதை தவிர்ப்பது உள்ளிட்ட செயல் முறைகளை கடைபிடித்தால் மூன்றாவது அறையை தாக்குதலில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!