Tamilnadu
கிராமத்திற்கு வந்த முதல் பேருந்து.. 70 ஆண்டு காலக் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்த தி.மு.க அரசு!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து மூன்று வழித்தடங்களுக்கு புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் நைனாங்குளம் வழித்தடமும் ஒன்று. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்தே இன்று வரை இந்த கிராமத்திற்குப் பேருந்து வசதி இல்லாமலே இருந்தது.
இந்த கிராம மக்களும் பல ஆண்டுகளாகப் பேருந்து இயக்க வேண்டும் என தொடர்ச்சியாகக் கோரிக்கை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், 75 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பேருந்து நைனாங்குளம் கிராமத்திற்குள் வந்ததை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டி வரவேற்றனர். பேருந்தில் ஏறி மகிழ்ச்சியாக பயணம் செய்தனர்.
தங்களின் 75 ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்றி தங்களின் ஏக்கத்தையும், கனவையும் நினைவாக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
Also Read
-
சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் : இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி!
-
”இந்திய விளையாட்டின் தலைநகரம் தமிழ்நாடு” : டெல்லியில் பெருமையுடன் சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி!
-
அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழி : நடிகை கெளரி கிஷனிடம் சர்ச்சை கேள்வி கேட்ட YouTuberக்கு வலுக்கும் கண்டனம்!
-
“ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய முயற்சிதான் S.I.R!” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“வாக்குத் திருட்டு என்ற நிலையை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!