Tamilnadu
கிராமத்திற்கு வந்த முதல் பேருந்து.. 70 ஆண்டு காலக் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்த தி.மு.க அரசு!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து மூன்று வழித்தடங்களுக்கு புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் நைனாங்குளம் வழித்தடமும் ஒன்று. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்தே இன்று வரை இந்த கிராமத்திற்குப் பேருந்து வசதி இல்லாமலே இருந்தது.
இந்த கிராம மக்களும் பல ஆண்டுகளாகப் பேருந்து இயக்க வேண்டும் என தொடர்ச்சியாகக் கோரிக்கை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், 75 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பேருந்து நைனாங்குளம் கிராமத்திற்குள் வந்ததை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டி வரவேற்றனர். பேருந்தில் ஏறி மகிழ்ச்சியாக பயணம் செய்தனர்.
தங்களின் 75 ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்றி தங்களின் ஏக்கத்தையும், கனவையும் நினைவாக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!