Tamilnadu
கிராமத்திற்கு வந்த முதல் பேருந்து.. 70 ஆண்டு காலக் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்த தி.மு.க அரசு!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து மூன்று வழித்தடங்களுக்கு புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் நைனாங்குளம் வழித்தடமும் ஒன்று. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்தே இன்று வரை இந்த கிராமத்திற்குப் பேருந்து வசதி இல்லாமலே இருந்தது.
இந்த கிராம மக்களும் பல ஆண்டுகளாகப் பேருந்து இயக்க வேண்டும் என தொடர்ச்சியாகக் கோரிக்கை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், 75 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பேருந்து நைனாங்குளம் கிராமத்திற்குள் வந்ததை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டி வரவேற்றனர். பேருந்தில் ஏறி மகிழ்ச்சியாக பயணம் செய்தனர்.
தங்களின் 75 ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்றி தங்களின் ஏக்கத்தையும், கனவையும் நினைவாக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
Also Read
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !