Tamilnadu
“நாடாளுமன்றத்தை முடக்கிய குற்றவாளியே மோடிதான்.. இந்த அரசு நீடிக்கக்கூடாது” : கொந்தளிக்கும் திருப்பூர் MP!
பெகாசஸ் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஒன்றிய அரசு பெகாசஸ் குறித்து விவாதிக்க முன்வராமல் நாள்தோறும் கூட்டத் தொடரை ஒத்திவைத்து வருகிறது.
அதேவேளையில், எதிர்க்கட்சிகளின் அமளியால் கூட்டத்தொடர் நேரமும், மக்கள் வரிப் பணமும் வீணாகிறது என ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தை முடக்கிய முதல் குற்றவாளி பிரதமர் மோடிதான் என்று திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.சுப்பராயன், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் மக்களின் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கிறார்கள். ஆனால், மோடி அரசு மடியில் கணம் இருப்பதால் பயப்படுகிறது. ஒன்றிய அமைச்சரவை மக்கள் நம்பிக்கைக்கு விரோதமாக நடப்பதால் ஒரு நிமிடம் கூட நீடிக்கக்கூடாது. உடனே ராஜினாமா செய்து தேர்தலைச் சந்திக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!
-
பீரோவைத் திறந்தபோது : துணிகளுக்கு இடையே 3 அடி நாகப்பாம்பு!
-
நாட்டிற்கு இருக்கும் ஒரே நெருக்கடி பா.ஜ.க தான் : மோடியின் பேச்சுக்கு அகிலேஷ் விமர்சனம்!
-
பொருளாதார அவசரநிலை பிறப்பிக்கப்படுமா? : பொதுமக்கள் அச்சம் - பிரதமர் மோடிக்கு ரவிக்குமார் எம்.பி கேள்வி!
-
“சட்டப்பேரவையில் இப்போதும் உடன்பிறப்புகள் உருவில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” : ப.திருமாவேலன்!