Tamilnadu
காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்... நடிகர் உட்பட 4 பேர் கைது : கடலூர் அருகே போலிஸ் அதிரடி!
கடலூர் மாவட்டம், ஏ.ஏரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவர் ‘திட்டமிட்டபடி’ என்ற படத்தை தயாரித்து நாயகனாக நடித்துள்ளார்.
நடிகர் ராமு மீது ஏற்கனவே புதுப்பேட்டை காவல்நிலையத்தில் மணல் கடத்தல், தகராறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறையில் இருந்து சில மாதங்களுக்கு முன்புதான் ராமு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், ராமு மீது உள்ள வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக காவல்துறை ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ராமு மற்றும் அவரது நண்பர்கள் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை அசிங்கமாக பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ராமு மற்றும் அவரது நண்பர்கள் திருநாவுக்கரசு, கரும்பூர் ஸ்ரீதர், பாக்கியராஜ் ஆகியோரை போலிஸார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
”தமிழ்நாட்டை வட்டமடிக்கும் பாஜக எனும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும்” : பரமக்குடியில் முதலமைச்சர் உரை!
-
“இனிவரும் 10 நாட்களும் மக்களோடு மக்களாக களப்பணி ஆற்ற வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
“NDA ஆட்சியில் நீதிக்கோ – நிர்வாகத்திற்கோ இடமே இருக்காது” : சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”N.D.A. எனும் பேரிடர்.. டெல்லி அடிமை தான் பழனிசாமி!” புதுக்கோட்டையில் அனல் பறந்த முதலமைச்சரின் பேச்சு!
-
“234 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!