Tamilnadu
காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்... நடிகர் உட்பட 4 பேர் கைது : கடலூர் அருகே போலிஸ் அதிரடி!
கடலூர் மாவட்டம், ஏ.ஏரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவர் ‘திட்டமிட்டபடி’ என்ற படத்தை தயாரித்து நாயகனாக நடித்துள்ளார்.
நடிகர் ராமு மீது ஏற்கனவே புதுப்பேட்டை காவல்நிலையத்தில் மணல் கடத்தல், தகராறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறையில் இருந்து சில மாதங்களுக்கு முன்புதான் ராமு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், ராமு மீது உள்ள வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக காவல்துறை ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ராமு மற்றும் அவரது நண்பர்கள் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை அசிங்கமாக பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ராமு மற்றும் அவரது நண்பர்கள் திருநாவுக்கரசு, கரும்பூர் ஸ்ரீதர், பாக்கியராஜ் ஆகியோரை போலிஸார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!