Tamilnadu
காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்... நடிகர் உட்பட 4 பேர் கைது : கடலூர் அருகே போலிஸ் அதிரடி!
கடலூர் மாவட்டம், ஏ.ஏரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவர் ‘திட்டமிட்டபடி’ என்ற படத்தை தயாரித்து நாயகனாக நடித்துள்ளார்.
நடிகர் ராமு மீது ஏற்கனவே புதுப்பேட்டை காவல்நிலையத்தில் மணல் கடத்தல், தகராறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறையில் இருந்து சில மாதங்களுக்கு முன்புதான் ராமு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், ராமு மீது உள்ள வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக காவல்துறை ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ராமு மற்றும் அவரது நண்பர்கள் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை அசிங்கமாக பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ராமு மற்றும் அவரது நண்பர்கள் திருநாவுக்கரசு, கரும்பூர் ஸ்ரீதர், பாக்கியராஜ் ஆகியோரை போலிஸார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்க காரணம் இதுதான்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு - முழு விவரம்!
-
சுதந்திரப் போராட்ட வீரர் பொன்னப்ப நாடாருக்கு ரூ.50 லட்சத்தில் சிலை... திறந்து வைத்த முதலமைச்சர் !
-
புறநகர் ரயில் ரத்து - தென்னக ரயில்வேயின் அலட்சியம்.. கேட்காமலேயே அரசு பேருந்து சேவை: அமைச்சர் சிவசங்கர்!
-
புரசைவாக்கம் முதல் மூலகொத்தளம் வரை.. இடைவிடாது அடுத்தடுத்து மக்கள் திட்டங்கள்.. துணை முதலமைச்சர் அசத்தல்!
-
மொத்தம் ரூ.16 கோடியில்.. உள்விளையாட்டரங்கம் முதல் திருமண மண்டபம் வரை.. திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!