Tamilnadu
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை? சிறப்புக்குழு அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம் - அமைச்சர் மஸ்தான் தகவல்!
மதுரை மாநகராட்சி புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தடுப்பூசி முகாம் இன்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து மதுரை சாத்தமங்கலம் சிறுபான்மையினர் மாணவி விடுதியை ஆய்வு செய்தார். பிறகு விடுதியின் அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், "தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் கட்டி தரப்படும். கடந்த இரண்டு மாதங்களில் வெளிநாடுகளில் 32 தமிழர்கள் இறந்துள்ளனர். 32 பேரில் 30 பேரின் உடல்கள் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 13,553 இலங்கை அகதிகள் குடும்பங்கள் அகதி முகாமுக்கு வெளியே வசித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குச் சட்ட ரீதியாக இந்தியக் குடியுரிமை பெற்றுத் தர தமிழக அரசின் சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்படும்" என தெரிவித்தார்.
Also Read
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !