Tamilnadu
நூற்றாண்டு பழமையான கோயில்களை பாதுகாக்க சிறப்புத் திட்டம்.. அசத்தும் அறநிலையத்துறை - குவியும் பாராட்டு!
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிதிலமடைந்த கோயில்களை முழுமையாக ஆவணப்படுத்தி பாதுகாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. நிதி வசதிமிக்க கோயில்களில் இருந்து ஆவணம் தயாரிக்கும் திட்டப்பணிகளுக்கு நிதியுதவி வழங்க அனுமதி அளித்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை பின்வருமாறு:
“மிகவும் சிதிலமடைந்த பழமையான கோயில்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பு திட்டம் தயாரிக்கும் பணிக்கு நிதி வசதியில்லாத கோயில்களுக்கு ஆணையர் பொதுநல நிதியில் இருந்து வழங்க வேண்டி சார்நிலை அலுவலர்களால் முன்மொழிவு சமர்பிக்கப்பட்டு வருகிறது.
தொன்மையான சிதிலமடைந்த கோயில்களை ஆவணப்படுத்தி பாதுகாக்கும் திட்டப் பணிக்கு காலதாமதம் ஏற்படுவதாலும், அக்கோயில்களின் நிலை மேலும் பாதிக்கக்கூடும் என்பதாலும், அதை தவிர்க்கும் பொருட்டு தங்களது சரகத்திற்கு உட்பட்ட நிதிவசதிமிக்க கோயில்களில் இருந்து நிதிவசதியில்லாத கோயில்களில் இப்பணியை மேற்கொள்ள நிதியுதவி வழங்க இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இப்பணிக்காக நிதி வசதியில்லாத கோயில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி தொகையினை நிதிவசதிமிக்க கோயில்களில் இருந்து துறையின் விதிகளுக்குட்பட்டு உரிய வழியில் விடுவித்து பின்னர் ஆணையருக்கு முன்மொழிவு சமர்ப்பித்து ஆணையர் பொதுநல நிதியில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !