Tamilnadu
“65 இடங்களில் எடுக்கப்பட்ட கொசுக்களின் மாதிரிகளில் எதிலும் ஜிகா வைரஸ் இல்லை”: சுகாதாரத் துறை தகவல்!
கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழக எல்லை பகுதி மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் ஜிகா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடுகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை முடுக்கி விட்டுள்ளது.
அதன்படி, வழக்கமான பரிசோதனைகளான எலிசா பரிசோதனையைத் தொடர்ந்து பிசிஆர் பரிசோதனையிலும் ஜிகா வைரஸ் கண்டறிய தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு சுகாதாரத் துறை எடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ஜிகா வைரஸ் தொற்றை கண்டறியும் சோதனை மையம் செயல்பட தொடங்தியுள்ளது.
இதுவரை கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளில் 65 இடங்களில் சேகரிக்கப்பட்ட ஏ.டி.ஸ் கொசுக்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த மாதிரியிலும் ஜிகா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கபடவில்லை என தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!