Tamilnadu
குடிபோதையில் வழிப்பறி; பணம் தர மறுத்தவரை கத்தியால் கிழித்த இளைஞர்கள் - திருப்பூரில் அட்டகாசம்!
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர் அவ்வழியே சென்ற பொது மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு இருந்தனர். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இளைஞர்களை பிடிக்க முற்பட்டபோது 5 இளைஞர்களில் இரண்டு பேர் தப்பி ஓடவே மதுபோதையில் இருந்த 3 பேரை பிடித்து கயிறு மற்றும் அவர்கள் அணிந்து வந்த சட்டைகளால் அவர்களை கட்டி வைத்து அடித்துள்ளனர்.
மேலும் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
குடிபோதையில் இருந்த இளைஞர்கள் அவ்வழியே செல்லும் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதோடு பணம் தர மறுத்த முதியவர் ஒருவரின் வயிற்றை கத்தியால் கிழித்தும் கல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
ரத்த காயத்துடன் இருந்த அவரை பொதுமக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல்துறையினர் தப்பியோடிய 2 பேர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!